திங்கள், 26 மார்ச், 2012

திண்டுக்கல்லில் போட்டோஷாப் சிஎஸ்6 –

திண்டுக்கல்லில் போட்டோஷாப் சிஎஸ்6 –
இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள்
திண்டுக்கல் பீஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர்ஸ் அசோயேசன் இணைந்து தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள். புகைப்படத்துறையினருக்காக நடத்தப்பட்ட பல்வேறு வகுப்புகளில், அடோபி போட்டோஷாப் சிஎஸ்5 மென்பொருளுக்காக 2 நாள் பயிற்சி வகுப்புகள் 23 மற்றும் 24, மார்ச், 2012 தேதிகளில் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் கோவை பாலாஜி கணினி வரைகலைப் பயிலகத்தின் திரு. ஜெ.வீரநாதன் மற்றும் ஆசிரியை செல்வி ரேணுகாதேவி ஆகியோர் பயிற்சியளித்தனர். எல்சிடி புரஜெக்டர் உதவியுடன் பெரிய திரையில் போட்டோஷாப்பின் அனைத்து கருவிகள் கட்டளைகள் பற்றிய விரிவான விளக்கம் தரப்பட்டது. கலந்துகொண்டவர்களின் எல்லா கேள்விகளுக்கும் செயல்முறையாக விளக்கம் தரப்பட்டது.
இரண்டு நாள் நிகழ்ச்சியின் துவக்கத்தில், ஜெ.வீரநாதன் எழுதி பதிப்பித்துள்ள போட்டோஷாப் சிஎஸ்6 என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கத் தலைவர் திரு. ராஜராஜன் புத்தகத்தை வெளியிட துணைத் தலைவர் திரு. அர்ஜுனன் பெற்றுக்கொண்டார். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்தப் புத்தகம் சிறப்புத் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் இறுதியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. பால்ராஜ் அவர்கள் நன்றிகூறினார். திண்டுக்கல் பீஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியின் திரு. பீ.எஸ்.வெங்கடேஷ்வரன் அவர்கள் இரண்டுநாள் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


 

திங்கள், 5 மார்ச், 2012

சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாராட்டு

சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாராட்டு
 
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பவித்ரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறந்த அறிவியல் மற்றும் ஆன்மிக தமிழ் நூல்களுக்கு "ராமமூர்த்தி நினைவு விருது' பெற்றவர
 
சென்னை, மார்ச் 5: சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாரட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
 இதில் சிறந்த நூல்களை தேர்வு செய்து அதன் ஆசிரியர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. ஆர்.வி.பதியின் "மனதை மயக்கும் கண்ணனின் கதைகள்', ஜெ. வீரநாதனின் "எளிய தமிழில் இணையத்தை அறிவோம்', பி. முத்துகுமாரசுவாமியின் "நகரத்தார் கோயில்களில் ஒன்பது', வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் "எல்லோருக்கும் எப்போதும் உணவு' ஆகிய நூல்கள் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியர்களுக்கு "ராமமூர்த்தி நினைவு' விருதுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, இந்தியா சிமெண்ட் நிறுவன துணைத் தலைவர் (நிதி) ஹரிஹர சுப்பிரமணியன், பவித்ரம் நிர்வாகி எஸ்.எஸ்.ஆர். ராஜ்குமார், கெüரவ ஆலோசகர் டாக்டர் ஜெ. ஜாய்ஸ் திலகம், நாடக ஆசிரியர் சி.வி. சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வியாழன், 1 மார்ச், 2012

நமது புத்தகத்திற்கு பரிசு

அன்புடையீர் வணக்கம்.நமது பயிலகம் வெளியிட்டுள்ள இணையத்தை அறிவோம் என்ற நூலுக்கு, அறிவியல் பிரிவில் சிறந்த நூலுக்காக சென்னை Pavithram Trust வழங்கும் Ramamurthi Memorial Award இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்‌ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்தப் புத்தகம், 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை புத்தக் கண்காட்சியில், முனைவர் பேராசிரியர் பொன்னவைக்கோ ஐயா அவர்களால் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார்கள்.