திண்டுக்கல் பீஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர்ஸ் அசோயேசன் இணைந்து தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள். புகைப்படத்துறையினருக்காக நடத்தப்பட்ட பல்வேறு வகுப்புகளில், அடோபி போட்டோஷாப் சிஎஸ்5 மென்பொருளுக்காக 2 நாள் பயிற்சி வகுப்புகள் 23 மற்றும் 24, மார்ச், 2012 தேதிகளில் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் கோவை பாலாஜி கணினி வரைகலைப் பயிலகத்தின் திரு. ஜெ.வீரநாதன் மற்றும் ஆசிரியை செல்வி ரேணுகாதேவி ஆகியோர் பயிற்சியளித்தனர். எல்சிடி புரஜெக்டர் உதவியுடன் பெரிய திரையில் போட்டோஷாப்பின் அனைத்து கருவிகள் கட்டளைகள் பற்றிய விரிவான விளக்கம் தரப்பட்டது. கலந்துகொண்டவர்களின் எல்லா கேள்விகளுக்கும் செயல்முறையாக விளக்கம் தரப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் இறுதியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. பால்ராஜ் அவர்கள் நன்றிகூறினார். திண்டுக்கல் பீஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியின் திரு. பீ.எஸ்.வெங்கடேஷ்வரன் அவர்கள் இரண்டுநாள் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
